அதிகாரிகளின் தீவிர ஆக்ஷன்.. ஒத்துழைப்பு தந்த தமிழர்கள்.. கொரோனாவுக்கு மீண்டும் டாட்டா காட்டிய தாராவி
மும்பை: ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகவில்லை. இதனால் கொரோனா முதல் அலையில் சாதித்து காட்டியதுபோல் இரண்டாவது அலையிலும் சாதித்து காட்டியுள்ளது தாராவி.
கொரோனா இரண்டாவது அலையில் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் மகாராஷ்டிரா. ஒரு கட்டத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக தினமும் 66,000-க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகளை பதிவு செய்த மகாராஷ்டிரா வில் இப்போது 10,000-க்கும் கீழே தொற்று குறைந்து விட்டது.
மகாராஷ்டிரா மற்ற மாநிலங்களை விட முதலிலேயே ஊரடங்கை கையில் எடுத்ததாலும், தடுப்பூசியை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்த்ததுமே அங்கு தொற்று குறைய முக்கிய காரணமாகும்.

கொரோனா பாதிக்கவில்லை
இந்த நிலையில் மும்பை நகரில் உள்ள தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகதது மகாராஷ்டிரா மாநில அரசுக்கு மேலும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதி என்று அழைக்கப்படும் தாராவியில் கொரோனா இரண்டாவது அலை உச்சமாக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி 99 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

குறைந்த பாதிப்பு
மக்கள் தொகை நெருக்கம் காரணமாக அங்கு வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்துவது சவலானதாக இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது.
ஏப்ரல் 8 முதல் அடுத்த 50 நாட்களில் அதாவது மே மே 26 க்குப் பிறகு 10-க்கும் மேற்பட்ட பாதிப்புகளே பதிவாகின.

13 பேர் சிகிச்சை
கடந்த 24 மணி நேரத்தில் அதுவும் குறைந்து யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. திங்கள் வரை தாராவியில் 13 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மூன்று பேர் கோவிட் பராமரிப்பு மையங்களில் மற்றும் ஆறு பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விரைவான நடவடிக்கை
கொரோனா இரண்டாவது அலை வந்தபோதே 'சோட்டா சியோன் மருத்துவமனை' என்று பிரபலமாக அறியப்படும் ஒரு நகர்ப்புற சுகாதார மைய தடுப்பூசி மையம் தாராவியில் தொடங்கப்பட்டது. தாராவி குடிசை பகுதி மக்களிடம் வீடு, வீடாக சென்று விரைவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பவர்கள் தனிமையில் வைக்கப்பட்டார்கள். நகர்ப்புற சுகாதார மைய தடுப்பூசி மையத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

ஒத்துழைத்த தமிழர்கள்
தாராவியில் முழுக்க முழுக்க வசித்து வரும் தமிழர்கள் மாநகராட்சி மற்றும் மருத்துத் துறை அதிகாரிகள் எடுக்கும் நடவடிகைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா முதல் அலையிலும் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தி தாராவி சாதனை படைத்தது தாராவி என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications