அதிகாரிகளின் தீவிர ஆக்ஷன்.. ஒத்துழைப்பு தந்த தமிழர்கள்.. கொரோனாவுக்கு மீண்டும் டாட்டா காட்டிய தாராவி
மும்பை: ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகவில்லை. இதனால் கொரோனா முதல் அலையில் சாதித்து காட்டியதுபோல் இரண்டாவது அலையிலும் சாதித்து காட்டியுள்ளது தாராவி.
கொரோனா இரண்டாவது அலையில் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் மகாராஷ்டிரா. ஒரு கட்டத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக தினமும் 66,000-க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகளை பதிவு செய்த மகாராஷ்டிரா வில் இப்போது 10,000-க்கும் கீழே தொற்று குறைந்து விட்டது.
மகாராஷ்டிரா மற்ற மாநிலங்களை விட முதலிலேயே ஊரடங்கை கையில் எடுத்ததாலும், தடுப்பூசியை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்த்ததுமே அங்கு தொற்று குறைய முக்கிய காரணமாகும்.

கொரோனா பாதிக்கவில்லை
இந்த நிலையில் மும்பை நகரில் உள்ள தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகதது மகாராஷ்டிரா மாநில அரசுக்கு மேலும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஆசியாவின் பெரிய குடிசைப்பகுதி என்று அழைக்கப்படும் தாராவியில் கொரோனா இரண்டாவது அலை உச்சமாக கடந்த ஏப்ரல் 8-ம் தேதி 99 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

குறைந்த பாதிப்பு
மக்கள் தொகை நெருக்கம் காரணமாக அங்கு வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்துவது சவலானதாக இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது.
ஏப்ரல் 8 முதல் அடுத்த 50 நாட்களில் அதாவது மே மே 26 க்குப் பிறகு 10-க்கும் மேற்பட்ட பாதிப்புகளே பதிவாகின.

13 பேர் சிகிச்சை
கடந்த 24 மணி நேரத்தில் அதுவும் குறைந்து யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. திங்கள் வரை தாராவியில் 13 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மூன்று பேர் கோவிட் பராமரிப்பு மையங்களில் மற்றும் ஆறு பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விரைவான நடவடிக்கை
கொரோனா இரண்டாவது அலை வந்தபோதே 'சோட்டா சியோன் மருத்துவமனை' என்று பிரபலமாக அறியப்படும் ஒரு நகர்ப்புற சுகாதார மைய தடுப்பூசி மையம் தாராவியில் தொடங்கப்பட்டது. தாராவி குடிசை பகுதி மக்களிடம் வீடு, வீடாக சென்று விரைவாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பவர்கள் தனிமையில் வைக்கப்பட்டார்கள். நகர்ப்புற சுகாதார மைய தடுப்பூசி மையத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

ஒத்துழைத்த தமிழர்கள்
தாராவியில் முழுக்க முழுக்க வசித்து வரும் தமிழர்கள் மாநகராட்சி மற்றும் மருத்துத் துறை அதிகாரிகள் எடுக்கும் நடவடிகைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா முதல் அலையிலும் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தி தாராவி சாதனை படைத்தது தாராவி என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications