பலர் முன் பெண்ணின் ஆடையை கழற்றி... நடனமாட வைத்த போலீஸ்? புகாருக்கு அமைச்சர் தரும் விளக்கம்
மும்பை: மகாராஷ்டிராவில் விடுதி ஒன்றில் பெண் ஒருவரை ஆடையைக் கழற்றி போலீஸ் நடனமாட வைத்த தரப்பட்ட புகார் போலியானது என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். பெண்கள் விடுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு அத்துமீறு காவல் ஒருவர் வந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், பெண் ஒருவரின் ஆடையைக் கழற்றி, அந்த காவலர் நடனமாட வைத்ததாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பாஜக கடுமையாக விமர்சித்தது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விளக்கமளித்துள்ளார். இது குறித்து சட்டசபையில் பேசிய அவர், "பெண்ணின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு உடனடியாக அமைக்கப்பட்டது.
அந்த விடுதியிலிருந்து 17 பெண்கள் உட்பட 41 பேரிடம் இது குறித்த விசாரணை நடத்தினோம். அதில் பெண்ணின் புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. அந்த பெண்கள் விடுதியில் காவலர்களுக்கு அனுமதியில்லை.
கடந்த பிப்ரவி 20ஆம் தேதி இந்த கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது. நடனத்தின்போது பெண் ஒருவர் தனக்கு அசவுகரியமாக இருந்ததால் தனது நீண்ட ஆடையை அகற்றினார். அப்போது அங்கு எந்த ஒரு ஆண் போலீஸ் அதிகாரியும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், புகார் அளித்த பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்றும் இது குறித்து ஏற்கனவே அவரது கணவரும் குடும்பத்தினரும் குறிப்பிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications