எதிர்க்கட்சியை ஆளும் கட்சி பாராட்றதும்.. ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி புகழ்வதும்.. குட் பாலிட்டிக்ஸ்!
மும்பை: மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சியான பாஜகவின் தலைவரான தேவேந்திர பட்னாவிஸை, ஆளும் சிவசேனா கட்சி வெகுவாக பாராட்டியுள்ளது.
சிவசேனாவும், பாஜகவும் முன்னாள் கூட்டாளிகள், பங்காளிகள்.. இப்போது பகையாளிகளாக வலம் வந்தாலும் கூட பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டவும், நெருக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் நெருக்கம் காட்டுவதையும் இரு கட்சிகளும் மறப்பதில்லை. அடிப்படையில் இரு கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான சித்தாந்தம் என்பதால் இவர்களுக்கிடையே நல்ல நட்பு எப்போதும் இழையோடிக் காணப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்படுவதாக சிவசேனா கட்சி பாராட்டியுள்ளது. மேலும் கொரோனா எதிர்ப்புப் போரில் மகாராஷ்டிர அரசின் துறைகளின் செயல்பாட்டை பட்னாவிஸ் பாராட்டியுள்ளதாகவும் சிவசேனா கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனாவின் இதழான சாம்னாவின் தலையங்கம் இப்படிக் கூறுகிறது... எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வயதில் மிகவும் இளையவர். முதல்வராக இருந்தபோது சிறப்பாகவும், துடிப்பாகவும் செயல்பட்டவர். எனக்கு கொரோனா வந்தால் நிச்சயம் நான் அரசு மருத்துவமனையில்தான் போய் சேருவேன் என்று தனது நெருங்கிய நண்பரிடம் சமீபத்தில் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளர். அவரது இந்த பாராட்டு வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அவரை சிலர் கிண்டல் செய்கின்றனர். அது தவறு. சரியல்ல. அவர் ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்.
பட்னாவிஸ் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கொரோனா பணிகளை மேற்பார்வையிடுகிறார். சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அரசின் பணிகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்துள்ளார். அரசுக்கு நல்ல ஒத்துழைப்பும் தருகிறார்.
அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் உள்ளதையே அவரது திருப்தி வெளிப்படுத்துகிறது. அது அரசியல் ஸ்டண்ட் அல்ல. அரசு மீது அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு ஏதாவது நடந்தால் அரசு தன்னை காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டுள்ளார். இது அரசுக்கு உற்சாகம் தருவதாக உள்ளது என்று கூறியுள்ளது சாம்னா.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருவது நினைவிருக்கலாம்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications