நடுவானில் தூங்கி வழியும் பைலட்கள்.. பெரும்பாலான இந்திய விமானிகள் இப்படிதானாம்! ஷாக் தரும் சர்வே
மும்பை: இந்திய விமானிகள் குறித்து எடுக்கப்பட்ட புதிய சர்வே ஒன்றின் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியாவில் விமான போக்குவரத்து என்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி, சென்னை, மும்பை போன்ற விமான நிலையங்கள் ஆண்டுக்குப் பல நூறு விமானங்களை இயக்குகின்றன.
அதேபோல பாதுகாப்பிலும் விமான போக்குவரத்து மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. இதனிடையே இந்திய விமானிகள் பற்றிய அதிர்ச்சி சர்வே ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

பெரும்பாலான விமானிகள்
விமானத்தின் ஒட்டுமொத்த கன்டிரோலையும் விமானிகள் தங்கள் கையில் வைத்து இருப்பார்கள். பயணிகள் அனைவருமே விமானியின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே இந்தியப் பயணிகளில் சுமார் 66% பேர் இணை விமானியிடம் சொல்லாமலேயே காக்பிட்டில் தூங்கியதாகத் தெரிவித்து உள்ளனர். அல்லது பணியில் இருக்கும் போது அவர்களை அறியாமலேயே அவர்கள் தூங்கியதையும் ஒப்புக் கொண்டு உள்ளனர்.

தூக்கம்
தேசிய மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கும் 542 இந்திய பைலட்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டு உள்ளது. அதில், "சுமார் 54% விமானிகள் கடுமையான பகல் நேரத் தூக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல 41% பேர் லேசான பகல் நேரத் தூக்கப் பிரச்சினையை எதிர்கொண்டு உள்ளனர். இதுவே 66% விமானிகள் திடீரென காக்பிட்டில் மைக்ரோ-ஸ்லீப்பை எதிர்கொள்ளக் காரணமாக உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காரணம்
அதிகரிக்கும் பணிச்சுமையே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. விமானி ஒருவருக்குச் சோர்வு அதிகரிக்கும்பட்சத்தில் அவரால் தெளிவாக யோசித்துச் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. இப்போது நடக்கும் பெரும்பாலான விமான விபத்துகளுக்கு விமானியின் சோர்வே முக்கிய காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது விமானத்தின் பாதுகாப்பில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

விமான விபத்து
கடந்த 2010ஆம் ஆண்டு மங்களூரில் மிக மோசான விமான விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த 158 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இதுவும் கருதப்படுகிறது. அந்த விமானத்தை இயக்கிய பைலட் 2.5 மணி நேர விமானத்தில் 1.40 மணி நேரம் தூங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை நேரம்
அதிகாலை நேரத்தில் இருக்கும் விமான புறப்பாடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று 74% விமானிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கேப்டன் அமித் சிங் கூறுகையில், "காலை 6 மணிக்கு விமானம் புறப்பட வேண்டும் என்றால் எப்போது எழுவீர்கள் என்று விமானிகளிடம் கேட்டோம். அதற்கு பெரும்பாலான விமானிகள் அதிகாலை 3 மணி முதல் 3:30 மணிக்கு எழுந்து இருப்போம் எனத் தெரிவித்தனர்.

ஓய்வு முக்கியம்
இந்த அதிகாலை நேரம் என்பது உடல் ஓய்வெடுக்கும் முக்கிய நேரம் ஆகும். இந்த நேரத்தில் தான் நமது உடலுக்கு ஓய்வு நிச்சயம் தேவை. ஆனால், தொடர்ச்சியாக இந்த நேரத்தில் எழுவது என்பது நமது உடல்நிலையைப் பாதிக்கும்" என்று அவர் தெரிவித்தார். விமானிகள் இப்போதெல்லாம் தினரசி 10-12 மணி நேரம் வரை விமானங்களை இயக்க வேண்டி உள்ளதால் விமானிகள் எளிதாகச் சோர்வடைகிறார்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications