பார்ட் பார்ட்டாக கழண்டுடுச்சு.. நாகையில் அரசு பஸ்ஸுக்குள்ளே சிலுசிலுன்னு காத்து வருதே.. காரணமே வேற
நாகை: தமிழகமெங்கும் அரசு பஸ்களில் ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே திருச்சி, விருதுநகரில் அரசு பஸ்கள் சேதமாகியதுடன், நாற்காலியுடன் சாலையில் விழுந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

திருச்சி: திருச்சி நகர பேருந்தில், கண்டக்டர் இருக்கையின் நெட்டு போல்டு திடீரென கழண்டுவிட்டது.. இதனால், சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்... இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் அலறி கூச்சலிட்டார்கள்..
அதேபோல, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 15ம் தேதி பஸ்ஸின் பின்பக்க படிகட்டு உடைந்து சாலையின் நடுவே விழுந்தது... அதனை டிரைவரும், கண்டக்டரும் எடுத்து சென்ற காட்சிகள் இணையத்தில் பேசுபொருளானது.
உத்தரவு: இதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களில் 6 ஆண்டுகள் தாண்டிய, பஸ்களை எல்லாம் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் புதிய பஸ்களை வாங்கி இயக்கப்பட வேண்டும் என்றும், பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும், போக்குவரத்து கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.. அரசு பஸ்களில் ஆய்வு மேற்கொண்டு, அடுத்த மூன்று நாட்களில் அவற்றை சீரமைக்க, போக்குவரத்து கழகங்களுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து துறை: பஸ்ஸில் ஏதாவது குறைகள் இருந்தால், 48 மணி நேரத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறையானது உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகரப் பேருந்து உள்ளிட்ட 20 ஆயிரம் பேருந்துகளை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று நாகையில் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.. வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடியே இல்லையாம்.. முழுக்க முழுக்க திறந்த நிலையிலேயே அந்த பஸ் சென்று வருகிறதாம்..
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி கடற்கரையோர பகுதி என்பதால், அங்கிருக்கும் குளிர்காற்று பஸ்ஸுக்கு உள்ளேயும் வீசுகிறதாம்.. வேறுவழியின்றி அங்குள்ள பொதுமக்களும் இந்த பஸ்ஸில், பயணம் செய்கிறார்களாம்..
ஆனாலும், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த பஸ்ஸுக்கு பின்னாடி சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளே, இதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவிட்டிருக்கிறார்கள்.. இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.
பிரேக்: இதனிடையே, போக்குவரத்து துறை உத்தரவையடுத்து, அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தபடியே உள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லும்போது, மொத்தம் 312 பஸ் பணிமனைகளிலும் உள்ள பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக 5 வருடத்தை கடந்துள்ள பஸ்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆய்வு முடிந்ததும் அறிக்கையாக தயாரித்து, அரசிடம் அளிக்க உள்ளோம். நீண்ட தூரம் செல்லும் வழித்தட பஸ்களை விட, மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களில் இயக்கப்படும் பழைய பஸ்கள் இன்னும் ஓரங்கட்டப்படாமல் உள்ளன.
கோரிக்கை: அதுமட்டுமல்லாமல், பராமரிப்பு பணி, உதிரிபொருட்களின் செலவும் அதிகரித்து வருவதால், பழைய பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவது தான் சரியான வழியாக இருக்கும்.. புதிய பஸ்கள், மின்சார பஸ்கள் வாங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளோம்" என்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications