நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உறவு"க்கு தடையாக மாமியார்.. கொந்தளித்த மருமகன்.. உச்சக்கட்ட டென்ஷனில்.. திகைத்த நாமக்கல்

: மாமியாரை கொன்ற மருமகனை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

நாமக்கல்: கணவன் மனைவியை நீண்ட நாட்களாகவே பிரித்து வைத்துவந்துள்ளார் மாமியார்.. இதையடுத்து நடந்த சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு பயங்கரம் நடந்துள்ளது.. திருச்செங்கோடு அருகே உள்ளது கருவேப்பம்பட்டி என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் கோகிலா.. 40 வயதாகிறது.

பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை

கணவனை இழந்தவர்.. கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு ஆர்த்தி என்ற மகளும் வசந்த குமார் என்ற மகனும் இருக்கிறார்கள்.

 ஆர்த்தியுடன் காதல்

ஆர்த்தியுடன் காதல்

இதில் ஆர்த்தியை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, கார்த்தி என்பவர் காதலித்தார்.. இவர் லாரி பாடிபில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருபவர்.. முறைப்படி, கோகிலாவிடம் சென்று பெண் கேட்டுள்ளார்.. பெண்ணை தேடி வந்து பெண் கேட்டதாலும், ஆதரவற்ற நிலையில் உள்ளதாலும் கோகிலாவும் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.. பிறகு, இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமணமும் சிறப்பாக நடந்தது.. தம்பதி இருவரும் மாங்குட்டை பாளையத்தில் வசித்து வந்துள்ளனர்.

ஜன்னி

ஜன்னி

ஆனால், கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் கார்த்திக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. ஜன்னி வந்துவிட்டதாம்.. இதை பார்த்து பயந்து போன ஆர்த்தி, அம்மா வீட்டிற்கு வந்து விட்டார்.. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மனைவியையும் பிரிந்து தனியாகவே அவதிப்பட்டு வந்தார் கார்த்தி.. இப்படியே ஒரு மாதமாக உடல்நலம் குன்றி கஷ்டப்பட்டுள்ளார்.. பிறகு, மாமியார் வீட்டிற்கு பின்பக்கத்திலேயே குடிபோகலாம், அங்கு சென்று மனைவியுடன் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்து, அதன்படியே, ஒரு வாடகை வீட்டை தேடி பிடித்து வந்து குடியேறினார் கார்த்தி.

 உறவுக்கு மறுப்பு

உறவுக்கு மறுப்பு

மனைவியையும் புது வீட்டிற்கு குடித்தனம் செய்ய அழைத்தார்.. ஆனால், ஆர்த்தி வர மறுத்துவிட்டார்.. முக்கியமாக, மகளை அனுப்ப கோகிலா தயாராக இல்லை.. கணவருடன் ஒன்று சேரவும் தடையாக இருந்து வந்துள்ளார்.. கணவன் - மனைவி சேர்ந்து இருப்பதே கோகிலாவுக்கு பிடிக்கவில்லை என்று தாமதமாகத்தான் கார்த்திக்கு தெரியவந்துள்ளது. . இதனால், நேரடியாகவே மாமியாரிடம் இதை பற்றி கேட்டு தகராறு செய்தார் கார்த்தி. அப்படித்தான் நேற்றும் மாமியாரிடம், தன் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கெஞ்சியுள்ளார்.

அம்மிக்குழவி

அம்மிக்குழவி

அதற்கு கோகிலா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தெரிகிறது.. இதனால், கோபம் உச்சத்துக்கு ஏறிய நிலையில், கார்த்திக் கோகிலாவின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. தகவலறிந்து வந்த திருச்செங்கோடு போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்... கணவன் - மனைவி உறவுக்கு தடையாக இருந்த மாமியார் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற சம்பவம் கருவெப்பம்பட்டி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
what happened in namakkal and why did police arrest young man மாமியாரை கொன்ற மருமகனை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X