உலக சுகாதார மையத்தில் இருந்து.. வெளியேறிய அமெரிக்கா.. டிரம்ப் எடுத்த ஷாக் முடிவு.. என்ன காரணம்?
நியூயார்க்: உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
கொரோனா காலத்தில் தவறாக நடந்து கொண்டது, கொரோனாவின் சோர்ஸை விசாரிக்காதது, சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் நேற்று பல உத்தரவுகளை பிறப்பித்தார். கிட்டத்தட்ட 200 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் ஒரு பகுதியாக உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. ஒரு பக்கம் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டே.. இன்னொரு பக்கம் இதற்கான ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.

அதோடு உலக சுகாதார மையத்திற்கு இனிமேல் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா வருடா வருடம் 111 மில்லியன் டாலர் அளிக்கிறது. சில சமயங்களில் தாமாக முன் வந்து 400 மில்லியன் டாலர் வரை கூட அமெரிக்கா அளிக்கும். உலக சுகாதார மையத்திற்கு அதிக நிதி அளித்து வரும் நாடாக அமெரிக்கா உள்ளது.
ஆனால் பிடன் ஆட்சிக்கு முன் நடைபெற்ற டிரம்ப் ஆட்சியில் உலக சுகாதார மையம் மீதான நிதியை டிரம்ப் நீக்கினார் உலக சுகாதார மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள். சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு போக்குவரத்தை தடை செய்த போது உலக சுகாதார மையம் எங்களை எச்சரித்தது. இது போன்ற தடைகள் பயன் அளிக்காது என்று என்னுடைய முடிவை விமர்சனம் செய்தது.
ஆனால் அதன்பின்தான் என்னுடைய முடிவு சரி என்று அவர்களுக்கு தெரிந்தது. உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விஷயங்களை பேசி வருகிறது. அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள். நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம்.
மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். கொரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் பெரிய அளவில் பணிகளை செய்யவில்லை. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். தவறான முடிவை எடுத்துவிட்டார்கள். அவர்கள் நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள்.
சீனாவில் கொரோனா தோன்றிய போதே அவர்கள் உலகை எச்சரித்து இருக்க வேண்டும். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஏன் அப்படி அசட்டையாக இருந்தார்கள். கொரோனா பரவுவது தெரிந்த பின்பும் கூட அதை பற்றி அவர்கள் உலகிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லை, என்று அமெரிக்க அதிபராக முன்பு டிரம்ப் இருந்த போது தெரிவித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.
இதையடுத்து உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications