ஒரு மணி நேரமாக எரியும் ஹெலிகாப்டர்.. மலையின் அடிவாரத்திலும் கிடக்கும் உடல்கள்! உள்ளூர் மக்கள் தகவல்
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் இறந்த நிலையில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் இருவரது உடல்களை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கோவை மாவட்டம் சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்கடனுக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான எம்ஐ-17வி5 ரக விமானம் புறப்பட்டது. அப்போது வெலிங்டனை அடைய 10 கிலோமீட்டர் தூரம் இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத் துறையை சேர்ந்த 14 பேர் பயணித்ததாக தெரிகிறது.

7 பேரின் நிலை என்ன
இந்த விமானத்தில் 7 பேர் வரை பலியாகியுள்ளனர். மற்ற 7 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இந்த விமானத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவியும் பயணித்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

தீயணைப்பு அதிகாரிகள்
விமான பெட்ரோல் என்பதால் அது அதிக வீரியத்துடன் வெடித்து சிதறி கொண்டே இருக்கிறது. மேலும் அடர்ந்த காட்டு பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு மணி நேரமாக விமானம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அடையாளம்
சம்பவ இடத்திற்கு உள்ளூர் ராணுவ அதிகாரிகள் வருகை தந்தனர். அவர்களிடம் உள்ளூர் மக்கள் கூறுகையில் 80 சதவீதம் எரிந்த நிலையில் இரு உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். சில உடல்கள் மலையின் அடிவாரத்தில் விழுந்து கிடப்பது தெரிய வருகிறது. அந்த உடல்களை மீட்கவும் அவற்றின் அடையாளத்தை கண்டறிவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

6 பேர்
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications