உ.பி: யோகி கட்டாயம் ஜெயிக்கனும்.... ஏன் தெரியுமா? விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத் செம்ம நக்கல்!
நொய்டா: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக அமர வேண்டும் என்று விவசாயிகள் சங்கமான பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கிண்டலடித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10 முதல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதர மாநிலங்களைப் போல மார்ச் 10-ந் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உ.பி.யில் ஆளும் பாஜகவுக்கு பல முனைகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3 அமைச்சர்கள், எம்.எல்.ல்.ஏக்கள் என கொத்து கொத்தாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தள் எம்.எல்.ஏக்களும் அக்கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதேபோல் சமாஜ்வாதி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

அகிலேஷுடன் சந்திப்பு
உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் களநிலவரத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. தலித்துகளின் தலைவரான பீம் ஆர்மி சந்திரசேகர், அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். சமாஜ்வாதி கட்சியுடன் சந்திரசேகர் ஆசாத் கட்சி கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

பாஜகவுக்கு எதிராக விவசாயிகள்
இந்நிலையில் டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கமும் உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியை விவசாயிகள் சங்கமான பாரதிய கிஷான் யூனியன் ஆதரிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பின்னர் இதனை அந்த அமைப்பு மறுத்திருந்தது.

ஜெயிச்சு எதிர்க்கட்சி தலைவராகட்டும்
தனிடையே பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், உ.பி. தேர்தல் தொடர்பாக கூறியதாவது: உ.பி.யில் எந்த ஒரு அணியையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் கட்டாயம் வெல்ல வேண்டும். ஏனெனில் அப்போதுதான் உ.பி.யில் வலிமையான எதிர்க்கட்சி அமையும். இவ்வாறு ராகேஷ் திகாயத் கூறினார்.
Recommended Video

களநிலவரத்தை மாற்றும் மேற்கு உ.பி.
மேற்கு உ.பி.யில் விவசாயிகள் போராட்டமானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றே கூறப்படுகிறது. மேற்கு உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஆர்.எல்.டி. தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்கின்றன கணிப்புகள். இதனால் மேற்கு உ.பி.யில் ஜாட், முஸ்லிம்களின் வாக்குகளை சமாஜ்வாதி கட்சி கூட்டணி அப்படியே அள்ளுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications