"நீங்கலாம் அரசியலில் தீண்டத்தகாதவராக இருந்தீங்க".. பாஜகவை விட்டு விளாசிய நிதிஷ்குமார் கட்சி!
பாட்னா: "நீங்கலாம் அரசியலில் தீண்டத்தகாதவராக இருந்தீங்க" என பாஜனதாவை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா விமர்சித்துள்ளார்.
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகியதும் அவரை பீகார் பாஜக அரசியல் தலைவர்கள் வறுத்தெடுக்க தொடங்கினர்.

கடுமையான விமர்சிப்பு
இதனால், பாஜக - ஐக்கிய ஜனாதா தளம் கட்சி இடையே மாறி.. மாறி.. வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்களான சுஷில் மோடி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர், நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து இருந்தனர். பலமுறை மத்திய அமைச்சராகவும், சட்ட சபையில் பலம் குறைந்த கட்சியாக இருந்தாலும் நிதிஷ்குமாரை முதல்வராகவும் பாஜக ஆக்கியது. இதற்காக நன்றியுடன் இருந்து இருக்க வேண்டும் என சாடியிருந்தனர்.

தீண்டத்தகாத கட்சி
மேலும், ஐக்கிய ஜனாதா தளம் கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்படும் என்றும் கேலி செய்து இருந்தனர். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா, 'பாஜக தலைவர்களின் கருத்து ஆட்சேபத்திற்குரியது மட்டும் அல்ல. இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது' என்றார். மேலும் பாஜகவை கடுமையாக சாடிய குஷ்வாஹா தொடர்ந்து கூறுகையில், 1995-96 க்கு முன்பாக பாஜக அரசியலில் தீண்டத்தகாத கட்சியாக கருதப்பட்டது.

சம்தா கட்சியுடன் கூட்டணி
அவர்களுடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அப்போதைய சம்தா கட்சியின் தலைவர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசும் நிதிஷ்குமாரும் தேவதூதர்கள் போல வந்து பாஜகவை மீட்டனர். பாஜகவின் மும்பை கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பிறகு சம்தா கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டது. அப்போதுதான் தீண்டத்தகாத அந்த கட்சியில் இருந்து அனைவரும் கூட்டணி வைக்கும் கட்சியாக மாறியது.

எந்த தடயமும் இருந்திருக்காது
ஜார்ஜ் பெர்னாண்டசும் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் உங்களைப் பற்றிய எந்த தடயமும் இருந்து இருக்காது" என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இந்த பதிவு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி











Click it and Unblock the Notifications