"நீங்கலாம் அரசியலில் தீண்டத்தகாதவராக இருந்தீங்க".. பாஜகவை விட்டு விளாசிய நிதிஷ்குமார் கட்சி!
பாட்னா: "நீங்கலாம் அரசியலில் தீண்டத்தகாதவராக இருந்தீங்க" என பாஜனதாவை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா விமர்சித்துள்ளார்.
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகியதும் அவரை பீகார் பாஜக அரசியல் தலைவர்கள் வறுத்தெடுக்க தொடங்கினர்.

கடுமையான விமர்சிப்பு
இதனால், பாஜக - ஐக்கிய ஜனாதா தளம் கட்சி இடையே மாறி.. மாறி.. வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்களான சுஷில் மோடி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர், நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து இருந்தனர். பலமுறை மத்திய அமைச்சராகவும், சட்ட சபையில் பலம் குறைந்த கட்சியாக இருந்தாலும் நிதிஷ்குமாரை முதல்வராகவும் பாஜக ஆக்கியது. இதற்காக நன்றியுடன் இருந்து இருக்க வேண்டும் என சாடியிருந்தனர்.

தீண்டத்தகாத கட்சி
மேலும், ஐக்கிய ஜனாதா தளம் கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்படும் என்றும் கேலி செய்து இருந்தனர். இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா, 'பாஜக தலைவர்களின் கருத்து ஆட்சேபத்திற்குரியது மட்டும் அல்ல. இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது' என்றார். மேலும் பாஜகவை கடுமையாக சாடிய குஷ்வாஹா தொடர்ந்து கூறுகையில், 1995-96 க்கு முன்பாக பாஜக அரசியலில் தீண்டத்தகாத கட்சியாக கருதப்பட்டது.

சம்தா கட்சியுடன் கூட்டணி
அவர்களுடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அப்போதைய சம்தா கட்சியின் தலைவர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசும் நிதிஷ்குமாரும் தேவதூதர்கள் போல வந்து பாஜகவை மீட்டனர். பாஜகவின் மும்பை கூட்டத்தில் பங்கேற்றனர். அதன்பிறகு சம்தா கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டது. அப்போதுதான் தீண்டத்தகாத அந்த கட்சியில் இருந்து அனைவரும் கூட்டணி வைக்கும் கட்சியாக மாறியது.

எந்த தடயமும் இருந்திருக்காது
ஜார்ஜ் பெர்னாண்டசும் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் உங்களைப் பற்றிய எந்த தடயமும் இருந்து இருக்காது" என்று தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் குஷ்வாஹா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இந்த பதிவு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்! -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
என் மூச்சு இருக்கும் வரை.. அன்புமணியுடன் சமாதானம் என்ற பேச்சிற்கே இடமில்லை.. ராமதாஸ் ஆவேசம்! -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஹசீனா சையத் நீக்கம் -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
ராமதாஸ் தரப்புக்கு பெரிய அடி.. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!












Click it and Unblock the Notifications