ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை தேடி தேடி வந்து கொத்திய பாம்பு.. அதிரும் கிராம மக்கள்!
பாட்னா: பீகார் மாநிலம் பவானிபூரில் பாம்பு கடித்து இறந்த தனது அண்ணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த தம்பியும் பாம்பு கடித்து இறந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பவானிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா (38). இவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள கோவிந்த் மிஷாரா (22) வந்துள்ளார்.
இரவில் இவர் தூங்கிக் கொண்டிருந்த போது இவரை பாம்பு கடித்தது. இதனால் இவரும் உயிரிழந்தார். அத்துடன் அதே வீட்டில் இருந்த உறவினர்களில் ஒருவரான சந்திரசேகர் பாண்டேவையும் (22) பாம்பு கடித்துள்ளது.

மருத்துவமனை
இதையடுத்து பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரவிந்த் மிஷாராவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வந்த கோவிந்த் மிஸ்ரா, சந்திரசேகர் பாண்டே ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து வந்தனர்.

ஜென்மம்
பொதுவாக தன் ஜோடியை கொன்றவர்களின் குடும்பத்தை பாம்புகள் ஜென்மம் ஜென்மமாக கடிக்கும் என சினிமாக்களில் பார்த்துள்ளோம். ஆனால் தற்போது பீகார் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாம்பு கடியால் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில் 81 ஆயிரம் முதல் 1,38,000 மரணங்கள் பாம்புக் கடிகளால் ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இவற்றில் பாதி இறப்பு இந்தியாவில் இருந்து ஏற்படுகிறது. பாம்பு கடித்து சிகிச்சை பெற இயலாதவர்கள், மருத்துவர்களை அணுகாமல் அனுபவமில்லாதோரை வைத்து சுய வைத்தியம் செய்து இறந்தோரின் எண்ணிக்கை இந்த கணக்கில் கொண்டு வரப்படவில்லை.

90 சதவீதம்
இந்தியாவில் 90 சதவீதம் பாம்புக் கடி 4 பெரிய பாம்புகளால் மட்டுமே நிகழ்கிறது. அவை காமன் கிரைட், இந்தியன் கோப்ரா, ரஸ்ஸல் வைபர் மற்றும் சா ஸ்கேல்டு வைபர் ஆகியவை ஆகும். பாம்பு கடித்தால் விஷம் உடல் முழுவதும் பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு இருந்தால் பாம்பு கடி மரணங்கள் இந்தியாவில் குறையும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications