மோடி அழைப்பு ஆதரவு- புதுவையில் மஞ்சள் நீராட்டு விழா முதல் அத்தனையுமே ரத்து!
புதுச்சேரி: பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற 22 ஆம் தேதி புதுச்சேரியில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்த மஞ்சள் நீராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான சோதனை ஓட்டமாக வருகின்ற 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, வருகின்ற 22 ஆம் தேதி புதுச்சேரியில் உணவகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும் என அந்தந்த சங்கங்களை சார்ந்தவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகிற 22 ஆம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழா ஒன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று விழா ஏற்பாட்டாளர்கள், மஞ்சள் நீராட்டு விழாவை ரத்து செய்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பலகையும் அந்த மண்டபத்தின் வாயிலில் தொங்கவிடப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், புதுச்சேரியில் உள்ள 300 மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர். புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளா்கள் நலச் சங்கத்தினர். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் மட்டுமே தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகுதான் திருமண நிகழ்வுகளுக்கான முன்பதிவு மீண்டும் தொடங்கும் என மண்டப உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களும் வருகின்ற 31 ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications