புதுச்சேரியில் லாக்டவுன் தளர்வுகள் - சனிபகவான், மணக்குள விநாயகர் ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம்
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஆலயங்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதை 45 நாட்களுக்குப் பிறகு இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மூடப்பட்டிருந்த ஆலயங்களை திறக்க புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் நகரத்திலும் ஆலயங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தனி மனித இடைவெளியுடன் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக வீசத்தொடங்கியது. தினசரி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் புதுச்சேரியில் கடந்த 45 நாட்களுக்கு முன்பாகவே தளர்வுகள் அற்ற லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு ஆலயங்கள் மூடப்பட்டன. மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில் இன்று முதல் தளர்வுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆலயங்களிலும் அனைத்து வழிபாட்டுத்தளங்களில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் கடந்த 1 மாதகாலமாக மூடப்பட்டிருந்தது இந்நிலையில் மாநில அரசுகள் விதிமுறைகளுடன் இன்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன அதைத் தொடர்ந்து காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வரன் பகவான் கோவில் இன்று காலை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்கு வரும்போது முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு வந்தனர். மேலும் கோவில் உள்ளே வரும் முன் கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின் சாமி தரிசனம் செய்தனர். சளி, காய்ச்சல் உள்ளவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications