புதுவையில் ஆட்சியை இழந்த ஆளும் காங். அரசு.. நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா
புதுவை: புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்திரராஜனிடம் வழங்கினர்.
Recommended Video

புதுவையில் என் . ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 30 சட்டசபை தொகுதிகளை கொண்ட புதுவையில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றது.

அது போல் என் ஆர் காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு நியமன எம்எல்ஏக்கள் தவிர்த்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இல்லை. 30 தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
புதுவை சட்டசபையில் 3 பேர் நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் பாஜகவினர். இதனால் சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக இருந்து வந்தது. இதில் 2019 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவின் பதவி பறிபோனது.
இதையடுத்து காங்கிரஸ்- திமுகவின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இதையடுத்து அண்மையில் அமைச்சர் நமச்சிவாயம், மற்றொரு எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துவிட்டனர்.

இதையடுத்து நாராயணசாமியின் அரசுக்கான ஆதரவு 16 ஆக குறைந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவும் பதவி விலகியதை அடுத்து காங்கிரஸின் பலம் 15 ஆக இருந்தது.
மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் நேற்றைய தினம் பதவி விலகியதால் தற்போதைய சூழலில் ஆளும் காங்கிரஸ்- திமுகவின் பலம் சட்டசபையில் 13 ஆக குறைந்துள்ளது.
சபாநாயகரை தவிர்த்து சட்டசபையில் காங்கிரஸின் பலம் 12ஆகவும் எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆகவும் உள்ளது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்சி பறி கொடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறினர். துணை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசையை சந்தித்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்வதாக கடிதத்தை வழங்கினார்கள்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications