144 தடைக்கு மக்களிடம் நோ ரெஸ்பான்ஸ்.. 31ம் தேதி வரை ஊரடங்கு.. நாராயணசாமி அதிரடி!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் நாராயணசாமி பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நேற்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநில வாகனங்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோதும், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவில்லை. புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போலவே உள்ளது. புதுச்சேரி மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று உயர்மட்ட அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க
புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கொரோனா விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்த, புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

காரணமின்றி வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இருசக்கர வாகனங்களிலும் யாரும் வெளியே செல்லக்கூடாது. வரும் 31 ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், பால், காய்கறிகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறந்திருக்கும்.
மேலும் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் வாங்கி செல்ல மட்டும் அனுமதி. ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என்றார். மேலும் புதுச்சேரியில் கொரோனா அறிகுறியுடன் 515 சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications