TVK Vijay: திமுகவை நம்பக் கூடாது.. நம்பவைத்து ஏமாற்றுவது தான் திமுக வேலை - பொங்கிய விஜய்
புதுச்சேரி: கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பக் கூடாது, மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுக வேலை என்றும், புதுச்சேரியில் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கவில்லை, புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து விஜய் எந்தவொரு பொதுக் கூட்டத்தையும் நடத்தவில்லை. விஜய் மக்கள் சந்திப்புக்காக சேலத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில், அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் மக்கள் பிரசாரம் மேற்கொள்ள தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் விரிவான சாலை வசதிகள் இல்லாததாலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அம்மாநிலத்தின் புஸ்ஸி ஆனந்தை பலமுறை சந்தித்துப் பேசியும் அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த வகையில், புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஹெலிபேடு மைதானத்திற்கு வரும் விஜய் பிரசார வேனில் நின்றபடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி உரையைத் தொடங்கிய விஜய் பேசுகையில், ஒன்றிய அரசுதான் தமிழகம் ஒரு மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம் என பிரித்து பார்க்கிறது. புதுச்சேரியும் தமிழகமும் ஒன்றுதான். வேறு வேறு ஊரில் வேறு வேறு வீட்டில், வேறு வேறு மாநிலங்களில் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான். நாம் எல்லாம் சொந்தம் தான்.
தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் ஒன்றுதான். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா என உலகின் மூளையில் எங்கு நம் வகையறா இருந்தாலும் நம் உயிர் தான். புதுச்சேரி என்றாலே நியாபகத்துக்கு வருவது மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரிமம், வில்லியனூர் மாதா தான். மாகாகவி பாரதியார் இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண் என பல்வேறு பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
1970 இல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பே 1974 இல் எம்ஜிஆர் ஆட்சி அமைந்தது. அதனால் தான் நமக்காக வந்தவர் எம்ஜிஆர், அவரை நீங்கள் மிஸ் பண்ணீடாதீங்க என்று அலர்ட் செய்தவர்களே புதுச்சேரிதான். தமிழ்நாடு போல புதுச்சேரி மக்களும் 30 வருடமாக என்னை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பது எனது கடமை.
தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி இல்லை புதுச்சேரி அரசு. வேறு ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் தன்னெழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது இந்த அரசு. புதுச்சேரி முதல்வருக்கு மனப்பூர்வமான நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொண்டால் பரவாயில்லை.
வரும் தேர்தலில் 100 சதவீதம் திமுகவினர் கற்றுக் கொள்வார்கள். புதுச்சேரியில் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கவில்லை. புதுச்சேரியின் மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். இங்கு ஐடி நிறுவனம் உருவாக வேண்டும் என்கிற எண்ணே அவர்களுக்கு இல்லை. இங்கு ஒரு அமைச்சரை நியமித்து 200 நாளாகிவிட்டது. ஆனால், அவருக்கு இலாகாவே கொடுக்கவில்லை.
புதுச்சேரி மக்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பவே கூடாது. மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுக வேலை. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல புதுச்சேரியையும் ஒதுக்கி விடக் கூடாது.
20 லட்சம் பேர் வாழக்கூடிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய நிதிக் குழுவில் இடம்பெறவில்லை. மாநிலங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. தோராயமாகவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விடுவிக்கிறது என்று பேசினார்.
-
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக? -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம்












Click it and Unblock the Notifications