மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியில் 100 சொகுசு கார்கள்.. ஒரு பொய்யில் 50 கோடியை அள்ளிய கோவை இளைஞர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் லஸ்பேட்டையில் வசிக்கும் அசோகன் என்பவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.. அந்த கும்பல் நாடு முழுவதும் ரூ.50 கோடி மோசடி செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கோவையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அசோகன் என்பவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய அவர் குறுஞ்செய்தி வந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

பின்னர் அவர்கள் கூறியபடி கிரிப்டோகரன்சியில் ரூ.98 லட்சத்தை பல்வேறு தவணைகளாக முதலீடு செய்திருக்கிறார். அதன் பின்னர் அவரது கணக்கில் ரூ.9 கோடி இருந்தது தெரியவந்தது.ஆனால் அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அவர் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த நபர் எடுக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அசோகன் இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டதை புதுச்சேரி போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்து சென்றனர்.
கோவை தெற்கு வெங்கடசாமி சாலை மேபிளவர்ஸ் மெடோஸ் பகுதியை சேர்ந்த 36 வயதாகும் நித்தீஷ் ஜெயின் , 40 வயதாகும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்திருக்கிறார்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, இந்த வழக்கில் கோவையை சேர்ந்த தாமோதரன், நூர்முகமது, சந்தானம், இம்ரான்பாஷா, நந்தியப்பன், கணேசன், ஆலியா, ரேஷ்மா உள்பட சென்னை, பெங்களூரு பகுதியை சேர்ந்த 10 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் கடந்த கடந்த 2022-ம் ஆண்டு கோவையில் ஆஷ்பே என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்கள். அதன் தொடக்க விழாவில் சினிமா பிரபலங்கள் பங்கேற்க வைத்துள்ளனர். 3 மாதங்களுக்கு பிறகு மாமல்லபுரத்தில் சொகுசு விடுதியில் நடந்த விழாவில் பிரபல நடிகை மூலம் தங்களிடம் முதலீடு செய்த 100 பேருக்கு கார்களை பரிசாக வழங்கி, அதிக முதலீட்டாளர்களை கவர்ந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த கும்பல் புதுச்சேரியைச் சேர்ந்த 9 பேரிடம் ரூ.3 கோடியே 60 லட்சம் மோசடி செய்துள்ளது. இதேபோல் டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட நாட்டின் பல்வேறு பகுதியில் ரூ.50 கோடி வரை மோசடி செய்திருப்பது புதுச்சேரி போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications