பொன்னியின் செல்வன் ரசிகர்களை பதறவைத்த தியேட்டர்.. ‘பாலில் பூச்சிகளே.. தீயரி எசமாரி..’ அதிரடி ரெய்டு!
சேலம் : சேலத்தில் 'பொன்னியின் செல்வன்' படம் திரையிடப்பட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் நகரில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்கில், நேற்று 'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க வந்த ரசிகர்கள், குளிர்பானம் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் மிதந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து அதிரடி சோதனை மேற்கொண்டு, காலாவதி தேதி இல்லாத பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், குளிர்பானங்கள் மற்றும் பூச்சி விழுந்த பால் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன்
தமிழகம் முழுவதும் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று வெளியானது. சேலத்திலும் பல்வேறு திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படம் மூன்று திரைகளில் வெளியானது.

சேலம் தியேட்டர் - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில் நேற்று அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் கேண்டீனில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தின்பண்டங்களை வாங்கிய போது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் குளிர்சாதன பெட்டியில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த டீம்
ரசிகர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவலிங்கம் தலைமையிலான டீம் திரையரங்கில் உள்ள இரண்டு கேன்டீன்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்த 150க்கும் அதிகமான குளிர்பானங்கள், பத்துக்கும் மேற்பட்ட பிஸ்கட் டப்பாக்கள் உள்ளிட்டவற்றைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாலில் பூச்சி - பறிமுதல்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, 50 லிட்டருக்கும் அதிகமான பால் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து திரையரங்கு முன்பாக உள்ள கால்வாயில் கொட்டி அழித்தனர். குறிப்பாக, பாலில் இறந்த பூச்சிகள் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திரையரங்குக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications