பயங்கர சத்தம்.. சேலம் ஏற்காட்டில் திடீர் நிலஅதிர்வு.. குலுங்கிய வீடு, கடைகள்.. மக்கள் அலறல்-ஓட்டம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதால் வீடு, கடைகள் குலுங்கிய நிலையில் மக்கள் அலறியடித்து ஓடினர்.
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் இன்று மதியம் பயங்கர சத்தம் கேட்ட நிலையில் லேசாக நிலம் அதிர்ந்துள்ளது. இதனால் வீடு, கடைகளில் இருந்த பொருட்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீடு, கடைகளை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்ளது. கோடை வாழிட தலமாக அறியப்படும் இந்த ஏற்காடு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. ஊட்டி, கொடைக்கானல் போன்று கோடை வாழ்தலமாக ஏற்காடு உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஏற்காடு சேலத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சுற்றுலா தலமான ஏற்காடு
சேலத்தில் இருந்து மலைப்பாதை வழியாக மொத்தம் 20 கொண்டைஊசி வளைவுகளை கடந்து சென்றால் இதமான சூழல் நிலவும் சுற்றுலாத்தலமான ஏற்காட்டை பொதுமக்கள் அடையலாம். ஆண்டுதோறும் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு
இந்நிலையில் தான் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் ஏற்காடு டவுனில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இது எங்கிருந்து வருகிறது என மக்கள் அறிவதற்கும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 வினாடிகள் வரை ஏற்பட்ட நிலஅதிர்வால் கடைகள், வீடுகளில் இருந்த பொருட்கள் லேசாக குலுங்கி உள்ளன.

மக்கள் அலறியடித்து ஓட்டம்
இதனால் பயந்துபோன மக்கள் உடனடியாக அலறியடித்து வீடு, கடைகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். அதன்பிறகு நிலஅதிர்வு எதுவும் உணரப்படவில்லை. இந்த அதிர்வானது ஏற்காடு டவுன் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் உணரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏற்காடு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் சொல்வது என்ன?
இதற்கிடையே தான் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛நில அதிர்வு குறித்து சீஸ்மோகிராபியில் எதுவும் பதிவாகவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். நிலஅதிர்வு தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கப்படும்'' என்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications