Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கர சத்தம்.. சேலம் ஏற்காட்டில் திடீர் நிலஅதிர்வு.. குலுங்கிய வீடு, கடைகள்.. மக்கள் அலறல்-ஓட்டம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதால் வீடு, கடைகள் குலுங்கிய நிலையில் மக்கள் அலறியடித்து ஓடினர்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் இன்று மதியம் பயங்கர சத்தம் கேட்ட நிலையில் லேசாக நிலம் அதிர்ந்துள்ளது. இதனால் வீடு, கடைகளில் இருந்த பொருட்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீடு, கடைகளை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்ளது. கோடை வாழிட தலமாக அறியப்படும் இந்த ஏற்காடு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. ஊட்டி, கொடைக்கானல் போன்று கோடை வாழ்தலமாக ஏற்காடு உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஏற்காடு சேலத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சுற்றுலா தலமான ஏற்காடு

சுற்றுலா தலமான ஏற்காடு

சேலத்தில் இருந்து மலைப்பாதை வழியாக மொத்தம் 20 கொண்டைஊசி வளைவுகளை கடந்து சென்றால் இதமான சூழல் நிலவும் சுற்றுலாத்தலமான ஏற்காட்டை பொதுமக்கள் அடையலாம். ஆண்டுதோறும் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

 பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு

பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு

இந்நிலையில் தான் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் ஏற்காடு டவுனில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இது எங்கிருந்து வருகிறது என மக்கள் அறிவதற்கும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 வினாடிகள் வரை ஏற்பட்ட நிலஅதிர்வால் கடைகள், வீடுகளில் இருந்த பொருட்கள் லேசாக குலுங்கி உள்ளன.

மக்கள் அலறியடித்து ஓட்டம்

மக்கள் அலறியடித்து ஓட்டம்

இதனால் பயந்துபோன மக்கள் உடனடியாக அலறியடித்து வீடு, கடைகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். அதன்பிறகு நிலஅதிர்வு எதுவும் உணரப்படவில்லை. இந்த அதிர்வானது ஏற்காடு டவுன் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் உணரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏற்காடு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் சொல்வது என்ன?

அதிகாரிகள் சொல்வது என்ன?

இதற்கிடையே தான் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛நில அதிர்வு குறித்து சீஸ்மோகிராபியில் எதுவும் பதிவாகவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். நிலஅதிர்வு தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கப்படும்'' என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+