Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம்.. எனது பயணத்தை கொச்சைப்படுத்துகிறது.. மு.க ஸ்டாலின் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் எனது வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துகிறது. அவர்களுக்கு கொச்சைப்படுத்த மட்டும் தான் தெரியும். எதையும் அழிக்க மட்டும் தான் தெரியும். ஆக்க தெரியாது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். இன்று சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்தார்.

People who want to ruin Tamil Nadu is making adverse comments about my foreign trip- MK Stalin Slams

அதன்பிற்கு சேலம் மாவட்டத்தில் முடிவு நிறைவு பெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- நான் வெளிநாட்டுக்கு போயிருந்தேன். ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்று இருந்தேன். ஏறத்தாழ 3 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள பெரும்பலானா நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தமிழ்நாடும் குறிப்பாக சென்னையும் உலக முதலீட்டாளர்களை ஈர்க்க கூடிய மையமாக அமைந்துள்ளது. ஜப்பானை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் உள்ளது.

ஆனால், அவர்களுக்கு தமிழ்நாட்டை அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன தமிழ்நாட்டை கடந்த 10 ஆண்டுகளை போல அல்லாமல் தற்போது நடைபெறும் திராவிட மாட்ல் ஆட்சியில் தொழில் வாய்ப்புகளும் முதலீடுகளுக்கும் ஏற்ற சூழல் நிலவுவதை சுட்டிக்காட்டி தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் நேரடியாக சென்று அழைப்பு விடுத்தோம்.

அழையா வீட்டிற்கு எந்த விருந்தாளியும் வரமாட்டார்கள். நம்முடைய படித்த இளைஞர்கள் வளத்தை வெளிச்சம் போட்டு காட்டினால்தான் முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் காட்டுவார்கள். அப்படி முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நேரில் நம்முடைய கட்டமைப்புகளை பார்த்து ஆய்வு செய்து முதலீடுகளை செய்வார்கள். அதனைக் கூட தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் ஒரு கூட்டம் கொச்சைப்படுத்துகிறது.

அவர்களுக்கு கொச்சைப்படுத்த மட்டும் தான் தெரியும். எதையும் அழிக்க மட்டும் தான் தெரியும்.ஆக்க தெரியாது. அந்த வேலையைத்தான் அவர்கள் செய்கிறார்கள்..செய்யட்டும் நான் கவலைப்படவில்லை...போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் என கடந்து செல்பவன் நான்..கருணாநிதி வழியில் வந்தவன் நான்.மக்கள் பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை. மக்களுக்கு பிணியாக இருக்கக் கூடியவர்களூக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+