மார்ச் மாதமே குடிநீர் இல்லை.. தண்ணீர் குடுங்க... சேலம் மேயர் காரை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு
சேலம் கோரிமேடு பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மேயரின் காரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்: கோரிமேடு பகுதியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் காரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெயில் ஆரம்பித்து சில நாட்களிலேயே பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் குடிநீர் கிடைக்க தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின்தடை, பராமரிப்பு பணிகள் காரணமாக சில நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும்.

சேலம் கோரிமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் புகாராகும். சேலம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன் போட்டியிட்ட வார்டில் இந்த கோரிமேடு பகுதி உள்ளது.
இன்று காலையில் ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்து மேயர் ராமச்சந்திரன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவரின் காரை சிறைபிடித்த பொதுமக்கள், குடிநீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக மேயர் ராமச்சந்திரனிடம் கூறினார். வாரத்தில் 2 நாட்களாவது தடையின்றி தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேயர் ராமச்சந்திரன் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். லாரிகள் மூலம் உடனடியாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று மேயர் ராமச்சந்திரன் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேயரின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications