35 பேரை காப்பாற்றி விட்டு.. கடைசி நேரத்தில் உயிரையும் விட்ட பஸ் டிரைவர்.. எடப்பாடியில் ஷாக்
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி புதூரில் வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவர் சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உயிரிழந்தார். இதன் மூலம் அதில் பயணித்த 35 பயணிகள் பத்திரமாக காப்பற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் எடப்பாடி மற்றும் தேவூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வாழகுட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணி (45) இவரை சின்னப்பன் என்று ஊரில் உள்ளவர்கள் அழைப்பது வழக்கம்.

35 பயணிகள்
சின்னப்பன் வழக்கம் போல் குமாரபாளையத்திலிருந்து எடப்பாடிக்கு பேருந்தை ஓட்டிச்சென்றார். அதில் 35 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி புதூர் பகுதியில் செல்லும் போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை
அதனையடுத்து சின்னப்பன் சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தியுள்ளார். பொதுமக்கள் ஓட்டுநர் சின்னப்பனை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் தகவல்
மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த ஓட்டுநருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், குருசரண் என்ற மகனும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.

பாராட்டு
மாரடைப்பு ஏற்பட்ட உடன் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தி 35 பயணிகளைக் காப்பாற்றிய சின்னப்பனின் செயலை பேருந்தில் பயணம் செய்த பயணிகள், ஊர் பொதுமக்கள் சக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பாராட்டி நெகிழ்ந்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications