தம்பி வைபவ் சூர்யவன்ஷி.. இவ்வளவு அவசரம் ரொம்ப தவறு.. பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்திய அணி!
துபாய்: யு19 ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இதற்கு இந்திய அணி வீரர்களின் பேட்டிங் அணுகுமுறையே காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி அத்தனை பந்துகளை சிக்ஸ் அடிக்க முயற்சித்து பேட்டை சுழற்றியது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.
யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்திய அணி ஆயுஷ் மாத்ரே தலைமையில் களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 9 சிக்ஸ், 17 பவுண்டரி உட்பட 172 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் இமாலய இலக்கை நோக்கி இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
அதில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஆரோன் ஜார்ஜ் 16 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து அதிரடியாக ஆடிய வைவப் சூர்யவன்ஷியும் 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதனால் பாகிஸ்தானின் வெற்றி உறுதியாகியது.
இறுதியாக இந்திய அணி 26.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு அனுப்ப வேண்டும் என்று தீவிரமாக ஆடியதே தோல்விக்கு காரணமாக மாறியது.
அதிலும் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கூட நிதானம் காட்டவில்லை. 348 ரன்கள் என்ற இமாலய இலக்கு இருக்கும் போது, முதல் 10 ஓவர்களில் இத்தனை ரன்கள் அடித்தால் போதும் என்ற வகையில் சிறிய சிறிய இலக்கை நிர்ணயித்து விளையாட வேண்டும். முதல் 5 ஓவரிலேயே ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பது தோல்வியில் மட்டுமே முடியும். இதனால் இந்திய யு19 வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டை புரிந்து விளையாட வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications