இதுதான்டா ஹர்திக் பாண்டியா.. சரியான இடத்தில் த்ரோ அடித்த சிந்தனை.. வெற்றி கைமாறிய தருணம்!
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஹர்திக் பாண்டியா அமைந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களை குவித்தது.

சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்களை விளாசினார். அதேபோல் கடைசி நேரத்தில் வந்த ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தல் 48 பந்துகளில் 105 ரன்களை விளாசினார்.
கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது 18வது ஓவரை வீசிய பிம்ரா வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவரது யார்க்கர் பந்துகளில் பெத்தல் - கரண் இருவருமே திணறினர். இதனை பிடித்துக் கொண்ட இந்திய அணி பவுலர்கள், தொடர்ச்சியாக யார்க்கரை வீசினர்.
தொடர்ந்து 19வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சாம் கரண் விக்கெட்டையும் வீழ்த்தினார். தொடர்ந்து சிவம் துபே வீசிய கடைசி ஓவரின் முதல்க் பந்தில் பெத்தல் லாங் ஆஃப் திசையில் அடித்தார். அது நேரடியாக ஹர்திக் பாண்டியா கைகளுக்கு சென்றது. அப்போது பவுலர் எண்டில் த்ரோ அடிக்காமல் நேராக விக்கெட் கீப்பருக்கு த்ரோ அடித்தார்.
அதனை பிடித்த சஞ்சு சாம்சன் உடனடியாக பெத்தலை ரன் அவுட் செய்தார். இதனால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகியது. அழுத்தம் நிறைந்த சூழலில் ஹர்திக் பாண்டியா சரியான முடிவை எடுப்பதில் வல்லவராக இருக்கிறார். ஏனென்றால் பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் சிங்கிள் ஓடாமல் சிக்சரை விளாசி தள்ளினார். அதுவும் இந்திய வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications