அமைச்சரை குரங்கோடு ஒப்பிட்ட மலிங்காவுக்கு ஓராண்டு தடை!
கொழும்பு: சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. எளிதாக வெற்றிபெற வேண்டிய அந்த போட்டியில் இலங்கை சொதப்பியது.
இந்த நிலையில் 'இலங்கை அணியின் தோல்விக்கு வீரர்கள் உடல் தகுதி பிரச்சினை காரணமா என்பது பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா அறிவித்திருந்தார்.
இதுபற்றி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, "கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்" என கூறியிருந்தார். அமைச்சரைதா் அவர் குரங்கோடு உவமைப்படுத்தியிருந்தார்.
Recommended Video


விசாரணை
இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அமைச்சரை விமர்சித்தது மட்டுமின்றி அனுமதியின்றி டிவி சேனலுக்கு பேட்டியளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குழு
இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட்டின் கெளரவ செயலர் மோகன் டி சில்வா, தலைமை செயல் அதிகாரி அஷ்லே டி சில்வா, ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் அசெல ரெகாவா ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

மன்னிப்பு
அந்தக் குழு நடத்திய விசாரணையின்போது, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட லசித் மலிங்கா, வாய்மொழியாக, மன்னிப்புக் கோரியதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஓராண்டு தடை
மலிங்காவை, ஓராண்டு இடைநீக்கம் செய்து தண்டனை விதித்தது இலங்கை கிரிக்கெட் அமைப்பு. ஆனால், அந்த தண்டனை, 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் வைக்கப்படும். அந்த 6 மாதங்களுக்குள் இதேபோன்ற தவறு மீண்டும் நடந்தால், தண்டனை செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தண்டனை கொடுப்பதை போல கொடுத்துவிட்டு அதை நிறுத்தியும் வைத்துள்ளது இலங்கை கிரிக்கெட் அமைப்பு. ஆனால், மலிங்காவின் அடுத்த ஒரு நாள் போட்டிக்கான வருவாயிலிருந்து 50 சதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
இலங்கை அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கும் கிரிக்கெட் தொடருக்கான, தேர்வுக்குழுவில் மலிங்காவின் பெயரும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே மலிங்காவுக்கு இதை ஒரு எச்சரிக்கை வாய்ப்பாக இலங்கை கிரிக்கெட் அமைப்பு வழங்கியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications