தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தர மறுக்கும் சிங்கள கட்சிகள்!
கொழும்பு: இலங்கையில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசு அமைக்கிற போது 3வது பெரிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை சிங்கள கட்சிகள் தர மறுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லை. இதனால் மைத்ரிபால சிறிசேனவின் சுதந்திரக் கட்சி ஆதரவளித்தது.

எதிர்க்கட்சியாக த.தே.கூ
ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி இரண்டும் இணைந்து தேசிய அரசு அமைக்கவும் முடிவு செய்துள்ளன. இதனால் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 16 எம்.பி.க்களுடன் 3வது இடத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயல்பாகவே பிரதான எதிர்க்கட்சியாகிவிடுகிறது.

அடம் பிடிக்கும் சிங்கள கட்சிகள்
ஆனால் சிங்களர் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதில் மும்முரமாக இருக்கின்றன. மைத்ரிபால சிறிசேனவின் சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியிலும் பங்கு வகித்துக் கொண்டு தங்களுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வேண்டுமென்று கோரி வருகிறது.

சொத்தை வாதம்
அதாவது அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பது சுதந்திரக் கட்சிதானே தவிர அந்தக் கட்சியை உள்ளடக்கிய கூட்டமைப்பு அல்ல என்கிற வியாக்யானத்தை முன்வைக்கிறார்கள். இந்த சொத்தை வாதத்தை முன்வைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

நாடாளுமன்ற குழு தலைவர் பதவி
இது சர்வதேச அளவில் பிரச்சனையாக வெடித்துவிடக் கூடாது என்பதற்காக, நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களை நியமிப்பது என்கிற முடிவில் இருக்கிறராம் ரணில். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக தமிழர் பிரதிநிதிகள் அமர்ந்துவிட்டால் தமிழர் பிரச்சனைகள் விஸ்வரூபமெடுத்து சர்வதேச அரங்கில் தொடர்ந்து எதிரொலித்துவிடும் என்ற அச்சத்தில்தான் இரண்டு சிங்கள கட்சிகளும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications