ரூ.1.18 கோடி வங்கி பணத்தை கொள்ளை அடித்த இசக்கிபாண்டியை 5 நாட்கள் காவலில் எடுத்தது போலீஸ்
பூந்தமல்லி: சென்னை அருகே வேலப்பன்சாவடியில் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்பச் சென்ற ரூ.1.18 கோடி ரொக்கப் பணத்தை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆன கார் டிரைவர் இசக்கி பாண்டி இன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழி-திசையன்விளை ரோட்டில் உள்ள தொட்டிக்காரன்விளையை சேர்ந்த மந்திரத்தின் மகனான இசக்கிபாண்டி, கடந்த 3ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட 1.18 கோடி பணத்தை அபேஸ் செய்துக் கொண்டு காரோடு எஸ்கேப் ஆனார்.'

சென்னையை அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப போன போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் தனிப்படைகள் அமைத்து இசக்கியை தேடி வந்தனர். அப்போது, இசக்கி பாண்டியின் குடும்பத்தினர் நாசரேத் அருகே உள்ள சடையன்கிணறு கிராமத்தில் வசிப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 6 ஆம் தேதி இசக்கிபாண்டி சரண் அடைந்தார். அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கவும், அக். 14ம் தேதி பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி, காரின் டிரைவர் இசக்கிப்பாண்டி இன்று திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூவிருந்தவல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக, இசக்கியின் மைத்துனர் கனராஜிடம் இருந்து 72 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications