Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை கருத்து.. 2 பேர் மீது போலீஸ் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் குறித்து ஆபாசமான முறையில் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 2 விஜய் ரசிகர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தன்யா ராஜேந்திரன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, நான் இடைவேளையில் வெளியே வந்துவிட்டேன் என்றும் சமீபத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் எனது கருத்தை பதிவு செய்திருந்தேன்.

2 Vijay fans sued for defaming a woman journalist

இதையொட்டி விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பேர் எனது புகைப்படத்துடன் ஆபாச தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணமான குறிப்பிட்ட 5 பேர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் போலீஸார் விசாரணை நடத்தி தற்போது 2 பேர் மீது வன்கொடுமைச் சட்டப் பிரிவு உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+