நெல்லையில்... தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 22 டாஸ்மாக் கடைகள் மூடல்
நெல்லை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 22 மதுக் கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. இருப்பினும் பிற கடைகளையும் அரசு படிப்படியாக மூடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு அக்டோபர் அப்போதைய அதிமுக அரசு டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மதுக் கடைகளைக் கொம்டு வந்து, 6500 மதுக்கடைகளை திறந்தது. இதில் தற்போது சுமார் 30,000 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசுக்கு மிகப் பெரிய வருமானத்தை டாஸ்மாக் கடைகள் அள்ளித் தருகின்றன. ஆனால் பாதித் தமிழகம் குடிகார மாநிலமாகி விட்டது.

வயது வித்தியாசமே இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர் வரை மது அருந்தும் அவல நிலை ஏற்பட்டு விட்டது. பெண்களும் பெருமளவில் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும், கோயில், குடியிருப்பு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள டாஸ்மாக கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 25 மீட்டர் தொலைவுக்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
மாநிலம் முழுவதும் இதற்காக அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதன்படி நெல்லை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையான கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் மற்றும் நெல்லை-மதுரை தங்க நாற்கர சாலையை ஓட்டி உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
புளியங்குடியில் 2, கடையநல்லூரில் 3, தென்காசி, வாசுதேவநல்லூர், வள்ளியூர் 1, சிவகரியில் 2, நெல்லையில் 8, சேரன்மகாதேவி, ராதாபுரம், நாஙகுநேரி லெவிஞ்சிபுரத்தில் தலா 1 என மொத்தம் 22 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதில் பணியாற்றிய ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ள வேறு கடைகளுக்கு மாற்றப்படுகின்றனர். மதுரை மண்டலத்தில் 200 கடைகளும், மாநில்ம் முழுவதும் சுமாராக 500 கடைகளும் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கும் நோட்டீஸ் கொடுத்து மூடப்பட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்












Click it and Unblock the Notifications