சென்னை அடகு கடைக்குள் கத்தியோடு புகுந்த கொள்ளையர்கள்.. போராடி தப்பிய உரிமையாளர்
சென்னை: அடகு கடைக்குள் கத்தியோடு புகுந்த கொள்ளையர்களை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு நகைகளை அபேஸ் செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டி பகுதியில் அடகுக் கடை நடத்தி வருபவர் பனையூரை சேர்ந்த சுரேஷ்.
நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணியளவில் சுரேஷ் கடையில் தனியாக இருந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் போர்வையில் மூன்று நபர்கள் அங்கு சென்றுள்ளனர்.

சந்தேகம்
கோவளத்திலிருந்து வருவதாகவும், நகைகளை அடகு வைக்க வேண்டும் என்றும் அம்மூவரும், கூறியுள்ளனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், நகையை அடகு வைக்க ஏற்க முடியாது என்று சுரேஷ் கூறியுள்ளார்.

தள்ளிவிட்டு ஓடினார்
இதனால் ஏமாற்றமடைந்த அம்மூவரும், சுரேஷை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கியுள்ளனர். அவரது வாயில் துணியை சொருகியுள்ளனர். ஆனாலும், தீரத்தோடு போராடிய சுரேஷ் கொள்ளையர்களை தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்து கத்தி கூச்சலிட்டார்.

தப்பியோட்டம்
சுரேஷின் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் அங்கு திரண்டனர். இதை பார்த்து பயந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
சிசிடிவி காட்சிகள்
இந்த பரபரப்பு காட்சிகள், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சுரேஷ் கானத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தபோது, அந்த மனுவை பெற போலீசார் மறுத்ததோடு, யாரிடமும் இதுகுறித்து சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் அட்டகாசம், போலீசாரின் மெத்தனம் போன்றவை தென் சென்னை மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications