காஞ்சி அருகே சம்பவம்: செல்ஃபி எடுத்தபோது ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட 3 வாலிபர்கள் மீட்பு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பாலாற்று மேம்பாலம் அருகில் நின்று வெள்ளத்துடன் சேர்த்து தங்களை செல்ஃபி எடுத்த மூவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 4 மணி நேரம் போராடி அவர்களை பத்திரமாக மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த பழையசீவரம் பாலாற்று பாலத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இளைஞர்கள் சிலர் அதை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக அதோடு, அதன் அருகே நின்று, செல்போனில் செல்ஃபி போட்டோக்களையும் எடுத்துதள்ளுகின்றனர்.

படம்: நன்றி news7
இந்நிலையில் வாலாஜாபாத்தை அடுத்த புளியம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், விஜி மற்றும் பாரதி ஆகிய மூன்று மாணவர்கள் அப்பகுதியில் நின்று தங்கள் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். ஆர்வத்தில் ஆற்றின் அருகேயே சென்றுள்ளனர். திடீரென மண் சரிந்ததால் மூவரும் வெள்ளநீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் 4 மணி நேரம் போராடி மூன்று மாணவர்களையும் மீட்டனர். இதுகுறித்து மீட்பு படையினர் கூறுகையில், எதிர்பாராமல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை. இப்படி, ஆர்வம்மிகுதியால் வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களையும் நாங்கள்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது. இதனால் எங்களது சக்தியும், நேரமும் விரையமாகிது என்றனர்.
அப்பகுதி மக்கள் சிலரோ, இப்படிப்பட்டவர்களை ஏன் காப்பாற்றினீர்கள். அப்படியே வெள்ளத்தில் போகட்டும் என்று மீட்பு படையினரிடம் சண்டைபோடாத குறையாக சத்தம் போட்டுள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications