அடேங்கப்பா.. தமிழகத்தில் சமையல் காஸ் மானியம் விட்டுக்கொடுத்தார் எண்ணிக்கை 6.4 லட்சம்!
சென்னை: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் சுமார் 6.4 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் காஸ் சிலிண்டர்களை வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சப்ளை செய்கின்றன.

வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு, ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக, 12 சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதற்கு மேல், எவ்வளவு சிலிண்டர்கள் வேண்டுமானாலும், மானியமில்லாமல் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
மானிய தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை குறைக்க விரும்பிய மத்திய அரசு, வசதி படைத்தவர்கள், காஸ் சிலிண்டர் மானியத்தை, தாங்களாக முன்வந்து விட்டுக் கொடுக்க முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தது.
அதன்படி மேற்கண்ட எண்ணெய் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களாக உள்ள 16 கோடி பேரில், இதுவரை சுமார் 1 கோடி பேர் தங்களது மானியத்தை சரண்டர் செய்துள்ளனர். அதன் மூலம், அரசு ரூ.1,100 கோடி சேமித்துள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் 20ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் மட்டும் சுமார் 6.4 லட்சம் பேர் காஸ் மானியத்தை சரண்டர் செய்துள்ளனர். தென் மாநிலங்களில் கர்நாடகாவில் 6.9 லட்சம் பேர் சரண்டர் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. இங்கு 6.4 லட்சம் பேர் சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக தெலங்கானாவில் 3.4 லட்சம் பேரும், கேரளாவில் 2.8 லட்சம் பேரும், ஆந்திராவில் 2.3 லட்சம் பேரும் மானியங்களை திருப்பி கொடுத்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications