பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தல்... சேலத்தில் பகீர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர்: பிறந்து ஏழே நாளான பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கடத்திய சம்பவம் சேலம் மேட்டூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரமலை பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் கடந்த 21ம் தேதி இரவு மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை எடை குறைவாக இருந்ததால், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் பவித்ராவிடம் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் குழந்தையோடு மருத்துவமனையிலேயே தங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று நண்பகலில், பவித்ரா தங்கியிருந்த அறைக்குச் சென்ற பெண் ஒருவர், குழந்தையை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் குழந்தையோடு திரும்பாத நிலையில், குழந்தை கடத்தப்பட்டதை பவித்ரா உணர்ந்து கதறி அழுதார்.
பவித்ராவின் புகாரின் அடிப்படையில் மேட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை கடத்திச் சென்றப் பெண், கடந்த 3 நாட்களாக மருத்துமனையிலேயே தங்கியிருந்ததும், மருத்துவமனை பணியாளர் எனக் கூறி அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களிடம் பேசி வந்ததும் தெரியவந்தது. இது மருத்துவமனை வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் குழந்தை காணாமல் போன வார்டில் கண்காணிப்பு கேமாரா இல்லாததால் பெண்ணைக் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் மருத்துவமனையின் மற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications