For Daily Alerts
Just In
அனுபவித்த தண்டனை போதும்.. கும்பகோணம் பள்ளி தீவிபத்து குறித்து ஹைகோர்ட்!
கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்களை தண்டனை போதும் என சென்னை ஹைகோர்ட் விடுவித்துள்ளது.
சென்னை: கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்களை தண்டனை போதும் என சென்னை ஹைகோர்ட் விடுவித்துள்ளது.
கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.
வழக்கு தொடுக்கப்பட்ட பின்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். இதை கணக்கில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் 9 பேரை விடுவித்துள்ளது.
Comments
English summary
Kumbakonam School fire accident case all have been released. Chennai high court have released all the persons. 9 among them released due to they were in jail for long time.
Story first published: Thursday, August 10, 2017, 18:13 [IST]