ஜெ. மரணம் குறித்து விசாரிக்க கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கோரி டிராபிக் ராமசாஅமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கோரி கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 5அம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பிரதாப் ரெட்டி, சசிகலா, சிஆர்.சரஸ்வதி, பொன்னையன் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பிரதாப் ரெட்டி, சகிகலா, கீதா ரெட்டி ஆகியோரின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மரணம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ, டிஆர்ஐ, மற்றும ஐபி ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் ஜனவரி 9ஆங்ம தேதிக்கு ஒத்தி வைத்தார். முன்னதாக டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை. அவரது மாணவி பாத்திமா மட்டும் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications