ஜெ. மரணம் குறித்து விசாரிக்க கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கோரி டிராபிக் ராமசாஅமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கோரி கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 5அம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பிரதாப் ரெட்டி, சசிகலா, சிஆர்.சரஸ்வதி, பொன்னையன் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பிரதாப் ரெட்டி, சகிகலா, கீதா ரெட்டி ஆகியோரின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மரணம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ, டிஆர்ஐ, மற்றும ஐபி ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் ஜனவரி 9ஆங்ம தேதிக்கு ஒத்தி வைத்தார். முன்னதாக டிராபிக் ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை. அவரது மாணவி பாத்திமா மட்டும் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்?












Click it and Unblock the Notifications