உதைக்க வேண்டாம்.. வைரலாகும் பைக் போட்டோ
சென்னை: திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா அவரது கணவர் ராஜவோடு பைக்கில் சென்றபோது டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் என்பவர் கணவர் ஹெல்மெட் அணியாததால் பைக்கை மறித்தார்.
அபராதத்தில் இருந்து தப்பிக்க ராஜா வேகமாக பைக் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து, காமராஜ் பைக்கில் விரட்டி சென்றதோடு, ராஜா ஓட்டிய பைக்கை 3 முறை எட்டி உதைத்துள்ளார்.
இதனால், ராஜாவின் பைக் சரிந்து விழுந்து, உஷா அதே இடத்தில் பலியானார். தமிழகம் முழுக்க இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காமராஜ் போன்ற போலீசாரின் செயலை கண்டித்து மீம்ஸ்கள் சுற்றுகின்றன.
அப்படித்தான் ஒரு போட்டோ வைரலாகியுள்ளது. பைக்கில் பதிவு எண் உள்ள இடத்தில், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம், உதைக்க வேண்டாம் என்று போர்டு மாட்டிக்கொண்ட பைக் போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது. நாட்டு நடப்பை எடுத்துக்கூறுவதாக உள்ளது இந்த போட்டோ.