ஆவின் பால் கொள்ளையன் அதிமுக 'வைத்தி' உட்பட 8 பேரின் காவல் நீட்டிப்பு
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கில் கைதான முன்னாள் அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் உள்பட 8 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆவின் பாலை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை திண்டிவனத்தை அடுத்த ஊரல்கிராமத்தில் நிறுத்தி, சிலர் அந்த பாலை திருடி அதில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து கொண்டிருந்தனர். அதனை வெள்ளிமேடு பேட்டை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 9 பேரை கைது செய்தனர்.

விசாரணையின்போது பல வருடங்களாக ஆவின் பாலில் தண்ணீரைக் கலந்து மிகப் பெரிய அளவில் மோசடி நடந்து வருவது தெரிய வந்தது. மேலும் இந்த மோசடிக் கும்பலின் தலைவன் அதிமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்றும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்திய நாதன், பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள் சுதாகரன், சந்திரசேகரன் உள்பட பலரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள் சுதாகரன், சந்திரசேகரன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மீதமுள்ள வைத்தியநாதன் உள்பட 17 பேரும் நீதிமன்ற காவலில் கடலூர் சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் வைத்தியநாதன், காத்தவராயன், சென்னியப்பன், அர்ஜுனன் உள்பட 8 பேரின் காவல் நேற்று முடிவடைந்தது. அவர்களை கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து வந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ்பிரபு முன்னிலையில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர்.
வழக்கினை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்ட 8 பேரையும் மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் 8 பேரும் மீண்டும், விழுப்புரம் கோர்ட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வைத்தியநாதன் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications