நெல்லையில் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை: 27 கடைகளுக்கு ஆப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்த 27 கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணியாமல் செல்லக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு சென்றால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை கொண்டு வந்து கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துச் செல்லலாம் என்றும் கூறி போக்குவரத்து போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள்.

இதனால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான ஹெல்மெட் கம்பெனிகள் நெல்லை சாலையோரங்களில் கடைகளை விரித்துள்ளன. இதில் பலர் போலி ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்துமாறு தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள ஹெல்மெட் கடைகளில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இதில் 27 கடைகளில் உள்ள ஹெல்மெட்டுகள் விதிமுறைகளை மீறி இருப்பது தெரிய வந்தது. அந்த ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திசையன்விளையில் அதிக விலைக்கு விற்பனை செய்த ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹெல்மெட் வாங்கும் போது பில் கேட்டு பெற வேண்டும். அதிக விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து தொழிலாளர் நலத்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். விலை குறியீட்டின் மேல் ஸ்டிக்கர் மூலமோ, எழுதி ஒட்டியோ பொருட்களின் விலை கிழிக்கப்பட்டிருந்தாலோ ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதுடன் தகவல் தெரிவிக்கலாம். அட்டை பெட்டியின்றி பாலீதின் கவரில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 27 வியாபாரிகள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மற்ற வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications