விஜயகாந்தின் முடிவுக்கு நான்தான் காரணம்... சொல்வது டிராபிக் ராமசாமி
திருப்பூர்: சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்ததற்கு தான்தான் காரணம் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார். தேவைப்பட்டால் பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை தேமுதிக உடன் இணைக்கவும் முயற்சி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 64 தினங்கள் உள்ள நிலையில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தேமுதிக தங்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த கட்சிகள், தனித்து போட்டி என்ற விஜயகாந்தின் அறிவிப்பால், வேறு வேலை பார்க்க கிளம்பி விட்டனர்.

விஜயகாந்த் ஏன் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் என்று ஆள் ஆளுக்கு ஒரு கதை சொல்ல, தனித்துப்போட்டி என்ற தேமுதிகவின் முடிவுக்கு தான்தான் காரணம் என கூறியுள்ளார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, " தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நான் சொன்ன யோசனையை ஏற்றுதான், அவர் தனித்துப் போட்டி என்ற முடிவை எடுத்திருக்கிறார். இதனை நான் வரவேற்கிறேன் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுகவை விட தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.
தேமுதிகவுக்கு கூட்டணி தேவையில்லை. தனித்து போட்டியிட்டாலே தேமுதிக அதிக இடங்களில் வெற்றி பெற்று அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய டிராபிக் ராமசாமி, தேவைப்பட்டால் பாஜக, தமாகா ஆகிய கட்சிகளை தேமுதிக கூட்டணியில் சேர்க்க உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய டிராபிக் ராமசாமி, திமுக உடன் தேமுதிக கூட்டணி சேராது என்று பேட்டியளித்தார், அப்போதே பலரும் இதனை கிண்டலடிக்கும் விதமாக பேசினர். இந்த நிலையில் தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவிக்க தான்தான் காரணம் என்று கூறியுள்ளார் டிராபிக் ராமசாமி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications