சசிகலாவை போயஸ்கார்டனில் சந்தித்த நடிகை ஸ்ரீதேவி - காரணம் என்ன தெரியுமா?
நடிகை ஸ்ரீதேவி சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் சென்று ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். சசிகலாவிடம் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளரின் மரணம் அக்கட்சியின் தொண்டர்களை மட்டுமல்ல அவரை நேசிக்கும் மக்களையும் அதிக அளவில் பாதித்து உள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதவர்கள், பின்னர் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

முக்கிய பிரமுகர்கள் சிலர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சசிகலாவை சந்தித்து துக்கம் விசாரித்து விட்டு செல்கின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக இருந்த போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார்.
அப்போதிருந்தே ஸ்ரீதேவிக்கும்,ஜெயலலிதாவுக்கும் இடையே நல்ல அன்பு உண்டு.ஜெயலலிதா மறைவு குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த ஸ்ரீதேவி, ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவாவது சென்னை வருவேன் என தெரிவித்திருந்தார். சிறுவயதில் ஜெயலலிதாவின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருப்பது போன்ற போட்டோவை போட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
அவர் சொன்னது போலவே நேற்று மாலை சென்னை வந்த நடிகை ஸ்ரீதேவி,நேராக போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு சசிகலாவை சந்தித்த துக்கம் விசாரித்தார். இந்த புகைப்படத்தை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சசிகலாவை நடிகர் அஜீத் சந்தித்தார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications