டுவிட்டரில் கோரிக்கை விடுத்த உடனேயே தீர்வு காண முடிவு... ரஜினிக்கு அதிமுக அரசு பயந்துவிட்டதா?
ரஜினி டுவிட்டரில் கோரிக்கை விடுத்த இரண்டாம் நாளே தமிழக அரசு, தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சு வார்த்தை குழு அமைத்துள்ளது. இது அதிமுக அரசு ரஜினிக்கு பயந்துவிட்டதா என்ற கேள்வியை
சென்னை: திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற கேளிக்கை வரியை ரத்து செய்யுங்கள் என ரஜினி கோரிக்கை விடுத்த இரண்டு நாட்களில் தமிழக அரசு பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல், மத்திய அரசு 'ஒரே தேசம் ஒரே வரி' என கூறி நாடுமுழுவதும் ஜிஎஸ்டி வரியை அமுல்படுத்தியது. இதற்கு பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசு சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்து வருகிறது. இந்த வரிவிதிப்பே பெரும் சுமையாக இருக்கும் பொழுது, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் வரை சுமத்தப்படும் போது தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனக் கூறி, கேளிக்கை வரியை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர்.

ரஜினி டுவிட்டரில் கோரிக்கை
இந்நிலையில், 'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருக்கும் ரஜினி காந்த், தன் டுவிட்டர் பக்கத்தில், 'திரையுலகை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்' என கேட்டுக்கொள்கிறேன் என கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார்.

பேச்சுவார்த்தைக்கு 'நோ ரெஸ்பான்ஸ்'
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ரஜினியின் கோரிக்கை விடுவதற்கு முன்பு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தி, அதில் நல்ல முடிவு எட்டப்படவில்லை.

அதிமுக அரசு அஞ்சுகிறதா?
இந்நிலையில் ரஜினி டுவிட்டரில் கோரிக்கை விடுத்த இரண்டு நாட்களில் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவை எட்டும் வழியாக தமிழக அரசு பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளது. இது ரஜினிக்கு அதிமுக அரசு பயந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ரஜினி ஆலோசனை
ரஜினி ரசிகர்களைச் சந்தித்து அரசியலில் இறங்குவது குறித்து பேசி வருகிறார். மேலும் இதுகுறித்து அரசியல் தலைவர்களையும் ஊடக ஆசிரியர்களையும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications