5 மீனவர்களுக்கு தூக்கு: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
சென்னை: இலங்கையில் தூக்கு விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் வழக்கறிஞர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு, மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர், அவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, இலங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மீனவர்களின் மேல்முறையீட்டு செலவிற்காக தமிழக அரசு 20 லட்சம் ரூபாயை ஒதுக்கி, அதை, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பியது.

வழக்கறிஞர்கள் போராட்டம்
இதனிடையே மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிரான பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
இனவெறி அரசு
சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக போராடுவோம் என்று முழக்கமிட்ட வழக்கறிஞர்கள், இலங்கையின் விசாரணை அதிகாரிகளை கைது செய்து சிறையிலடைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்றங்களை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்றைய தினம் நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications