அதிமுக வேட்பாளர்கள் மீது புகார் மழை.. இன்னும் பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் மாறலாம்
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் பலர் மீது எதிர் கோஷ்டியினர் நீண்ட குற்ற பத்திரிகையை தயாரித்து கட்சி தலைமைக்கு அனுப்பி வருவதால், ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இன்னும் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடவும், எஞ்சிய 7 தொகுதிகளில் தோழமை கட்சியினரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட செய்யவும் தீர்மானித்து சில தினங்கள் முன்பு ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டார். அதில் பல்வேறு புகாருக்கு உள்ளானவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதை பார்த்ததும், கட்சியினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

சம்பந்தப்பட்ட வேட்பாளர்களை மாற்றக் கோரி, கட்சி தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர். கட்சியினரிடம் இருந்து வேட்பாளர்கள் மீது குவியும் புகார் மனுக்கள், கட்சி தலைமையையும், கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கட்சியினர் வேண்டுகோளை ஏற்று, பல வேட்பாளர்களை, கட்சி தலைமை மாற்றி உள்ளது. எனவே ஊக்கமடைந்த எதிர்கோஷ்டியியனர், புகார் கடிதங்களை ஷிப்ட் போட்டு எழுதி, கார்டனுக்கு அனுப்பிக்கொண்டே உள்ளனர்.
சேலம்,ஏழாவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் கே.ஆர்.எஸ். சரவணன். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கவுன்சிலராகவே அவர் மக்கள் பணி ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, தொகுதியில் எதிரொலிக்கிறது.
இவருக்கு, திமுகவினர் நடத்தி வரும், உள்ளூர் சேனலில் தொடர்பு உள்ளதும், உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல திருச்சி கிழக்கு தொகுதி மனோகரன், சங்கரன் கோயில் ராஜலட்சுமி, காஞ்சிபுரம் மைதிலி திருநாவுக்கரசு, ஆற்காடு, கே.வி.ராமதாஸ், மதுரை கிழக்கு தக்கார் பாண்டி, காட்பாடி அப்பு, பேராவூரணி கோவிந்தராஜன், துறைமுகம் சீனிவாசன், கம்பம் ஜக்லைன், சோளிங்கர் பார்த்தீபன், மாதவரம் தட்சணாமூர்த்தி, லால்குடி விஜயமூர்த்தி, வீரபாண்டி மனோன்மணி, அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி உள்ளிட்ட பலர் மீது புகார் மனுக்குள் ஜெயலலிதாவின் கவனத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
துறைமுகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வட சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏவாகும். இவர் அதிமுக தலைமைக்கு எதிராக மாறியுள்ள சேகர்பாபுவிடம் உதவியாளராக இருந்ததாகவும், 2006-11 கால கட்டத்தில் எம்.எல்.ஏவாக இருந்தபோது, தொகுதியில் வசிக்கும் வட மாநில கட்டிட உரிமையாளர்களை மிரட்டி பணம் பெற்றதாகவும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மொத்த வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டி ஜெயலலிதாவுக்கு புகார் கடிதங்கள் பறந்துள்ளன.
எனவே வேட்பாளர் மாற்றப்படலம் தொடரும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications