ஓபிஎஸ் அரசு, எடப்பாடி 'அரசுகளுக்கு' பாராட்டு தெரிவித்த அதிமுக பொதுக்குழு பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை, வானகரம் பகுதியிலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆட்சியை பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வர்தா புயலில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றியதாக வாழ்த்து கூறப்பட்டது. அதேபோல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அரசு சிறப்பாக நடத்தி வருவதாகவும் பொதுக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

வர்தா புயல் வீசியபோது பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். அப்போதே சசிகலாவுடன் அவருக்கு மோதல் முற்றியது. இந்த நிலையில் அவரது பணி பாராட்டப்பட்டுள்ளது.
அதேபோல எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நடத்தி வருகிறது. எனவே அவருக்கும் பாராட்டு தெரிவிப்பதை போல உள்ளது பொதுக்குழு கூட்ட தீர்மானம்.












Click it and Unblock the Notifications