ஏர்செல் சேவை பாதிப்பால் ஆம்புலன்ஸை அழைக்க முடியவில்லை... நாமக்கலில் முதியவர் பலி!
ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டதால் அவசர உதவி எண் 108ஐ அழைக்க முடியாமல் விபத்தில் சிக்கிய முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Recommended Video

நாமக்கல் : ஏர்செல் நிறுவன சேவைகள் பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸை அழைக்க முடியாமல் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவன டவர் சேவையை பயன்படுத்தும் ஏர்செல்லுக்கும், நிறுவனத்திற்கும் நிதி விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்போன் டவர்களை அந்த நிறுவனம் முடக்கியதாக தெரிகிறது. இதனால் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஏர்செல் நெட்வொர்க்கை பயன்படுத்துவோர் சேவை கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் கோவை, புதுச்சேரியில் உள்ள ஏர்செல் ஷோரூம்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் வேறு நெட்வொர்க்கிற்கு மாற விண்ணப்பித்துள்ளதால் ஏர்செல் சர்வரும் முடங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கும் மாற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலையை கடக்க முயன்ற போது முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தை நேரில் பார்த்தவர் உடனடியாக ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் ஏர்செல் சேவை பாதிப்பால் அவருடைய எண்ணில் இருந்து 108 அவசர உதவி எண்ணை அழைக்க முடியவில்லை. இதனையடுத்து அருகில் இருந்தவர்களை தேடிப்பிடித்து அதன் பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸை அழைக்க முடியாததால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏர்செல் சேவை பாதிப்பால் ஆம்புலன்ஸை அழைக்க முடியாமல் போனதே உயிரிழப்புக்கு காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications