பேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் குரல் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி.. அற்புதம் அம்மாள் உருக்கம்
சிறையில் 26 ஆண்டுகளாக இருக்கும் பேரறிவாளனுக்கு உடல் நலமில்லாத தந்தையை பார்க்க பரோல் வழங்க சட்டசபையில் கோரிய எம்எல்ஏக்களுக்கு அற்புதம் அம்மாள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் பேரறிவாளன். அவருக்கு பரோல் வழங்குவது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர சபரநாயகர் தனபாலிடம் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் மனு அளித்தனர்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கூறியதாவது: சட்டசபையில் பேரறிவாளனுக்காக பரோல் கேட்டு குரல் கொடுத்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு நன்றி.
நான் இப்போது பேரறிவாளனுக்கு பரோல்தான் கேட்கிறேன். என் கணவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அதனால் உடனடியாக பரோல் கொடுக்க வேண்டும். வயதான காலத்தில் எங்களுடன் எங்கள் மகன் இருக்க வேண்டும் என்று போராடுகிறேன்.

மாநில அரசின் உரிமை
பரோல் அளிப்பது மாநில அரசின் உரிமை. இதனை இந்த அரசு கவனத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க வேண்டும். 26 ஆண்டுகளுக்கு முன் இதோ அனுப்பிவிடுகிறேன் என்று கூட்டிப் போனார்கள். இன்னும் வரவில்லை.

7 பேர் விடுதலை
ஜெயலலிதா பேரை சொல்லி ஆட்சி நடத்தும் இந்த அரசு 7 பேர் விடுதலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் வெளியே வர வேண்டும். என்று அற்புதம் அம்மாள் கூறினார்.

பரோல் மறுப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 21 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். உடல் நலமில்லாமல் இருக்கும் அவரது பெற்றோரை பார்க்க பரோல் கோரிய போது, சிறைத்துறை அதனை மறுத்துவிட்டது.

சட்டசபையில் குரல்
இதுகுறித்து எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் சட்டசபையில் குரல் கொடுத்தனர். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சட்டசபையில் முன் வைக்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications