பேரறிவாளனுக்கு பரோல்… சட்டசபையில் குரல் கொடுத்த எம்எல்ஏக்களுக்கு நன்றி.. அற்புதம் அம்மாள் உருக்கம்
சிறையில் 26 ஆண்டுகளாக இருக்கும் பேரறிவாளனுக்கு உடல் நலமில்லாத தந்தையை பார்க்க பரோல் வழங்க சட்டசபையில் கோரிய எம்எல்ஏக்களுக்கு அற்புதம் அம்மாள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் பேரறிவாளன். அவருக்கு பரோல் வழங்குவது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர சபரநாயகர் தனபாலிடம் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் மனு அளித்தனர்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் கூறியதாவது: சட்டசபையில் பேரறிவாளனுக்காக பரோல் கேட்டு குரல் கொடுத்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்கு நன்றி.
நான் இப்போது பேரறிவாளனுக்கு பரோல்தான் கேட்கிறேன். என் கணவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அதனால் உடனடியாக பரோல் கொடுக்க வேண்டும். வயதான காலத்தில் எங்களுடன் எங்கள் மகன் இருக்க வேண்டும் என்று போராடுகிறேன்.

மாநில அரசின் உரிமை
பரோல் அளிப்பது மாநில அரசின் உரிமை. இதனை இந்த அரசு கவனத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க வேண்டும். 26 ஆண்டுகளுக்கு முன் இதோ அனுப்பிவிடுகிறேன் என்று கூட்டிப் போனார்கள். இன்னும் வரவில்லை.

7 பேர் விடுதலை
ஜெயலலிதா பேரை சொல்லி ஆட்சி நடத்தும் இந்த அரசு 7 பேர் விடுதலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் வெளியே வர வேண்டும். என்று அற்புதம் அம்மாள் கூறினார்.

பரோல் மறுப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 21 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். உடல் நலமில்லாமல் இருக்கும் அவரது பெற்றோரை பார்க்க பரோல் கோரிய போது, சிறைத்துறை அதனை மறுத்துவிட்டது.

சட்டசபையில் குரல்
இதுகுறித்து எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் சட்டசபையில் குரல் கொடுத்தனர். மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சட்டசபையில் முன் வைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications