காசு வாங்கிக் கொண்டு திமுகவில் சீட் கொடுத்திருக்கிறார்கள் - மு.க.அழகிரி
மதுரை: நாடாளுமன்றத் தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள் என்று திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மேலும் வரும் தேர்தலில் திமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும். அது ஜெயிக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது...

எல்லாரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள்
வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே சீட்
வேட்பாளர்களைத் தெரிவு செய்ய முறையான நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. பணம் கொடுத்தவர்களுக்கே தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை
இன்னும் சொல்லப்போனால், அதிமுகவிலிருந்துவிட்டு பின்னர் திமுகவுக்கு வந்தவர்களுக்கெல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

நெப்போலியன், ரித்தீஷுக்கு ஆப்பு
வேட்பாளர் பட்டியலில் அழகிரிக்கு ஆதரவாக நின்றவர்களான நடிகர் நெப்போலியன், ரித்தீஷ் ஆகியோருக்கு சீட் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெப்போலியனுக்கு சீட் கிடைக்காமல் தடுத்தது நேரு
நெப்போலியன் அழகிரி ஆதரவாளர் என்பதோடு, அவரது மாமாவான திருச்சி கே.என். நேருவும் சேர்ந்து சீட் கிடைக்க விடாமல் தடுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.

எதிர்பார்த்தால்தானே ஏமாற்றம்
இருப்பினும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நிச்சயமாக தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றமும் அடையவில்லை என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications