நாங்க எதிர்பார்க்கலை… ஆனாலும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்: சொல்கிறார் தமிழிசை
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். எனினும் வழக்கில் வென்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று காலை, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையொட்டி, தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழிசை கூறும்போது, "சொத்துக் குவிப்பு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது. வழக்கில் வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழகம் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. எனவே, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜகவின் செயல்பாடு புதிதாக திட்டமிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமாவளவன் கருத்து
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, "சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இருப்பினும், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
முன்னதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்தது. ஆனால், தற்போது கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை இவ்வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.
இந்த இரண்டு தீர்ப்புகளையுமே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இரண்டு நீதிபதிகளுமே தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளனரா அல்லது நெருக்கடி காரணமாக தீர்ப்பு வழங்கினரா என்பது கேள்விக்குரியாக உள்ளது. இந்த தீர்ப்பால் மற்ற அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி என்று கூறுவது பொருத்தமாகாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications