தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துங்கள்.. தண்டனைக்கும் தயாராகுங்கள்.. என்ன சொல்கிறார் ஹெச்.ராஜா?
தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவதிலும் தவறு இல்லை. மீறும்பட்சத்தில் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சென்னை: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறு இல்லை என்றும், அதேநேரம், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்ற, 'புதிய பொருளாதாரத்தை நோக்கி நமது பாரதம்' கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசுகையில் இவ்வாறு கூறினார்.

ராஜா மேலும் கூறியதாவது: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாடுடன் உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும் போது மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டு விட்டு எதிர்க்கட்சியான பின்னர் எதிர்ப்பதுதான் இரட்டை நிலைப்பாடு.
2011ம் ஆண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்த போதுதான் காளையை காட்சி விலங்கு பட்டியலில் சேர்த்தனர். அப்போது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
கடந்த ஆண்டு ஜனவரி 9ல் ஜல்லிக்கட்டை அனுமதித்து வெளியிட்ட மத்திய அரசின், அரசாணையை உச்சநீதிமன்றம் தடை செய்துவிட்டது. எனவே இப்போது மத்திய அரசின் கரங்கள் கட்டப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது 144 தடை உத்தரவு பிறப்பித்தால் மீறிப் போராட்டம் நடத்துவோம். நம் உரிமைகள் உறுதிப்பாட்டை பறைசாற்ற தடையை மீறுவதில் தப்பு இல்லை. தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவதிலும் தவறு இல்லை. மீறும்பட்சத்தில் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் பாஜக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்த நிலையில், அக்கட்சி ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியோ அப்படி செய்தால் மாநில அரசை கலைக்க முடியும் என மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications