மதுரை எஸ்பிஐ வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் சோதனை
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 52 எஸ்பிஐ வங்கிக்கிளைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாநகரில் உள்ள 52 எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிகள், கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காலம் போய் இப்போது வங்கி கிளைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

எஸ்பிஐ வங்கி தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறைந்த பட்ச தொகை இருப்பு, ஏடிஎம் வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு, ஆகிய விதிமுறைகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் யாராவது வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வாரத்தின் முதல்நாளான இன்று வெடிகுண்டு மிரட்டல், அதைத்தொடர்ந்து நடைபெறும் சோதனைகளால் மதுரையில் எஸ்பிஐ வங்கிக்கிளைகள் பரபரப்படைந்துள்ளன.












Click it and Unblock the Notifications